கூட்டணிக்காக அதிமுக அலைபாயும் கட்சி இல்லை என அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேரவையில் பேசிய அவர், மரக்கிளையில் அமரும் பறவைக்கு கிளை முறிந்து விடுமோ என்ற அச்சம் இருக்காது. ஏனென்றால் அதை நம்பிக்கை கிளையில் இல்லை, இறக்கையில் உள்ளது. அதனைப் போல அதிமுகவின் பங்களிப்பை மக்களவைத் தேர்தலில் நிச்சயம் காணலாம் என்று கூறிய அவர் யாருக்காகவும் எதற்காகவும் அதிமுக காத்திருக்காது என தெரிவித்தார்.