தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கனவே கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையான அரிசி தற்போது 68 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில உயர்தர அரிசி 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அரிசியில் விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர். பால், பெட்ரோல் மற்றும் சிலிண்டர் விலை ஏற்றதால் பொதுமக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் தற்போது அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.