விஜயதாரணி அண்மையில் பாஜகவில் இணைந்ததால் விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், விளவங்கோடு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க திமுக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.