தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.