காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். விஷ்வா மீது 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து, கொலை வழக்கில் விஷ்வா தேடப்பட்டு வந்த நிலையில், இன்று சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். விஸ்வா பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் இருந்துள்ளார்.