ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் கொடுத்துள்ளது. இந்த பண பட்டுவாடா புகார் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி என வேட்பாளர்களை அறிவித்த பல கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.