தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் அடுத்தடுத்து விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.