தமிழக அரசு ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்தியன் மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு எஸ்பி ஆகவும், சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை எஸ்பி ஆகவும், சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் எஸ்பி ஆகவும், கடலூர் எஸ்பி சக்தி கணேசன் சிலை கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவளி பிரியா தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் எஸ்பி ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.