சென்னையில் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இடைத்தேர்தலில் போட்டியிடுவது பாஜகவா, அதிமுகவா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.