ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிக்கன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாமக்கல்லில் நேற்று கறிக்கோழி உயிருடன் விலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று ஏழு ரூபாய் அதிகரித்து 105 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. கொள்முதல் விலை 7 ரூபாய் உயர்ந்ததால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை கிலோ 25 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி 5.20 காசுகளாக விற்பனை ஆகிறது.