தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாததால் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்படுமா என கேள்வி எழுந்துள்ளது.