இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார். பாரத் பெயர் மாற்றம் என்பது வெறும் வதந்தி. இதுபோன்ற வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த அவர், பாரத் என்ற பெயர் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு மனநிலை தற்போது வெளிப்பட்டுள்ளது என்று விமர்சித்தார்.