சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். குறிப்பாக, சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் சாலையில் ஆறுபோல் தண்ணீர் ஓடுகிறது. இதனால், பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பல பகுதிகளில் இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.