ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் வந்த ஒற்றை யானை மிதித்து வசந்தா என்பவர் உயிரிழந்துள்ளார். காட்பாடி அருகே வீட்டில் வெளியே கட்டி வைக்கப்பட்ட ஆட்டை பார்க்க வந்தபோது, வசந்தாவை யானை துரத்தி துரத்தி மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று இதே யானை தாக்கி கணவன் – மனைவி உயிரிழந்த நிலையில், இன்று 3வது உயிர் பறிபோனது. இந்த ஆட்கொல்லி யானையால் அப்பகுதி மக்கள்பீதியடைந்துள்ளனர்.