தஞ்சை மாவட்டம் பசுபதி கோயிலில் பள்ளி அருகே மரம் விழுந்து மாணவி சுஷ்மிதாஷென் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் படுகாயமடைந்த மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.