ஹரியானா முதல்வருடன் பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர். அங்கு பாஜக மற்றும் ஜனநாயக ஜனாத கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஜே ஜே பி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அம்மாநில துணை முதல்வராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்ட காரணங்களால் கூட்டணி முறிந்தது. பாஜக மற்றும் ஜே ஜே பி உடனான கூட்டணி கவிழ்ந்தாலும் புதிய கூட்டணி உடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக