சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. 2006-2011 வரை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ல் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை என இருவரையும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுவித்த நிலையில், ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது