தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டில் 17 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த சோதனை அதிகாலை இரண்டு மணி அளவில் நிறைவடைந்தது. இதனிடையே நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.