நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மே 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 20.9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார். தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர் இத்தேர்வை எழுதிய நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போரா வருண்சக்கரவர்த்தி ஆகியோர் 99.9% மதிப்பெண் பெற்று கூட்டாக தேசிய அளவில் முதலிடம் பிடித்தனர்.

தொடர்ந்து, முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆவார்கள். தமிழ்நாட்டில் 1,44,516 பேர் இத்தேர்வை எழுதிய நிலையில் 78,693 பேர் தகுதி பெற்றுள்ளனர்.