அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் நல்லம்மாளுக்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதித்தது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, தண்டனையை அனுபவிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.