தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிந்து ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.