மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டிகளில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். லக்னோ மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.