அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு ஏதும் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனங்களில் மோசடி நடைபெறுவதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், அந்த விசாரணையை செபி அமைப்பே நடத்தும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது