டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். ED 3ஆவது முறையாக அனுப்பிய சம்மனை ஏற்க மறுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை; ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என கடிதம் கொடுத்துள்ளார். இதனால், அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.