தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வருவதால், முன்கூட்டியே வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ரூ.1000 பெற புதிதாக 11.85 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இதனால் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக, கூடுதலாக 8 வட்டாட்சியர், 101 துணை வட்டாட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.