நைஜீரிய நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 54-ஆக உயர்ந்துள்ளது. 

ஆப்பிரிக்க நாட்டில் பெனியூ, நசரவா ஆகிய மாநிலங்களுக்கு இடையே இருக்கும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ருகுபி எனும் கிராமத்தில் திடீரென்று வெடிகுண்டு விபத்து நடந்தது. இன, மதச்சண்டைகள் அதிகம் நடக்கக்கூடிய பகுதியில் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. இதில் உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆக உயர்ந்திருக்கிறது.

மேலும், கால்நடைகள் அதிகம் உயிரிழந்ததாகவும், பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். இதில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெடிகுண்டு விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.