பாஜகவின் முறைகேடுகள் வெளிப்பட்டு வரும் நிலையில் அவற்றை மறைக்க என் மீது அவதூறு பரப்புகின்றனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி எம்எல்ஏ இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி இவ்வாறு பேசி உள்ளார்.  ஜி-20 மாநாடு நடைபெறும் இடம் அருகே இருந்த குடிசைகளை மறைத்தது தான் மத்திய அரசின் சாதனை எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக அரசை விமர்சனம் செய்துள்ளார்.