ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து 49 சுயேட்சைகள், 25 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தேசிய மாநில கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவிடம் இருந்து இபிஎஸ் விலகி நிற்கிறார். தேர்தல் முடிந்ததும் இணைந்துக் கொள்வார் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். ஜி.கே.வாசனிடம் இருந்து சீட்டை பறித்துக்கொண்டு அந்த தொகுதியில் அதிமுக நிற்கிறது. அதிமுகவினருக்கு பஞ்சாயத்து செய்வதிலேயே பாஜக கவனம் செலுத்துகிறது என்று விமர்சித்தார்.