நாமக்கல் மாவட்டத்தில் பைக் மீது கார் மோதிய விதத்தில் 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் புதுச்சத்திரம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 வயது குழந்தையான சாய்பாலமித்ரன், சரவணன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு விபத்தில் முத்துக்குமார் என்பவர் காயமடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.