கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற எச்.ராஜா, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பா.ஜ.க நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய எச்.ராஜா இதுகுறித்து தெரிவித்தார்.

அதாவது “நான் தேர்தலில் அரசியலில் இருந்து விலகுகிறேன். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தான் போட்டியிடும். எனினும் பாஜக அரசியலை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்க பாடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். இத்தொகுதியில் பா.ஜ.க தான் போட்டியிடும் என அழுத்தமாக கூறிவிட்டார் எச்.ராஜா.