கேரளாவில் மாடலிங் துறையில் தன் பணயத்தை துவங்கி பின் தமிழுக்கு வந்து சீரியல் நாயகியாக வலம் வந்தவர் தான் ஆயிஷா. அதாவது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய சத்யா தொடரில் நாயகியாக நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டார் ஆயிஷா. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதை கவர்ந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது காதலரை பற்றி அறிவித்தார் ஆயிஷா. எனினும் அவர் யார் என்று அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஆயிஷா Propose தினத்தை முன்னிட்டு ஒரு கியூட்டான போட்டோவை வெளியிட்டு உள்ளார். அதில் வெட்கத்துடன் புரொபோஸ் தினமாமே என பதிவுசெய்துள்ளார்.