குருகிராமில் 8 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த 21 வயது டெலிவரி பையன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குருகிராம் செக்டர் 93 பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில், செக்டர் 83-ஐச் சேர்ந்த சமத் என்பவர், உணவு கொடுப்பதாகக் கூறி சிறுமியை ஏமாற்றி கடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதன்கிழமை அன்று புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, செக்டர் 10 காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, சில மணி நேரங்களில் சிறுமி மீட்கப்பட்டார்.

விசாரணையில், குற்றவாளி சமத் ஒரு தனியார் நிறுவனத்தில் டெலிவரி பையனாக பணிபுரிவதாகவும், சிறுமியை உணவு கொடுப்பதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஒப்புக்கொண்டதாக குருகிராம் காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.