குருகிராமில் அதிவேகமாக வந்த தார் வாகனம் ஜார்சா பறக்கால மேம்பாலத்துக்கு அருகே உள்ள தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் எக்ஸிட் 9 அருகே பிரிக்கும் தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து செப்டம்பர் 27, 2025 அதிகாலை 4:30 மணியளவில் நிகழ்ந்தது.
வாகனம் சேவைப் பாதையில் இருந்து முழு வேகத்தில் வந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு மீது மோதியதாக காட்சிகள் காட்டுகின்றன. இந்த கோர விபத்தில் 25 முதல் 31 வயதுக்குட்பட்ட 5 பேர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்தரப் பிரதேச பதிவு எண்ணை உடைய இந்த வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. காவல்துறை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
गुरुग्राम में हुए दर्दनाक Thar के Accident का CCTV !! इस हादसे में 25 साल से 31 साल के 5 लडके और लडकियों की मौत हो गई !!
एक छोटी सी गलती ने 5 परिवारों को तबाह कर दिया !!#gurugram #gurugrampolice #tharaccident @gurgaonpolice pic.twitter.com/6CCnZoofGs— Raj K Verma-Journalist🇮🇳 (@RajKVerma4) September 27, 2025
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியைச் சேர்ந்த 25 வயது பிரதிஷ்டா மிஸ்ரா, ஆக்ராவைச் சேர்ந்த 30 வயது ஆதித்ய பிரதாப் சிங், ஹரியானாவின் சோனிபட்டைச் சேர்ந்த 31 வயது கவுதம், 26 வயது லாவண்யா சிங் மற்றும் சோனி ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த 28 வயது கபில் ஷர்மா உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷஹரைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவரும் கிரேட்டர் நொய்டாவில் இருந்து வந்து, எபோலா என்ற கிளப்பில் மது அருந்தியதாகவும், அதிகாலை 4:15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மற்றொரு சம்பவமாக, இம்மாத தொடக்கத்தில் கான்பூர்-வாரணாசி நெடுஞ்சாலையில் தார் வாகனம் ஒன்று தடுப்பு மீது மோதி பல முறை சுழன்றது, ஆனால் அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
