ஹரியானா முதல்வர் பதவியை மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறாத பாஜக, ஜே ஜே பி கட்சியின் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து ஜேஜேபி தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பெரும் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது.