இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் ஆதாரிலுள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஆதார் கார்டு அப்டேட் செய்யும் வசதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இனி வரும் நாட்களில் மொபைல் நம்பர், புகைப்படம் மாற்றம், பெயர் போன்ற முக்கியமான அப்டேட்டுகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். தனியார் பொது சேவை மையங்கள் மட்டுமல்லாமல் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் நீங்கள் அப்டேட் செய்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்ய மார்ச் 14ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.