அரபிக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும். அதற்கடுத்து, 22ம் தேதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலுக்கு “தேஜ்” என்று இந்தியா பரிந்துரைத்த பெயர் சூட்டப்படும். இந்த புயலால் தமிழகத்தில் கனமழை வெளுக்கும்.