செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வல்லபாய் பட்டேல் 3000 கோடிக்கு சிலை வச்ச… எங்க பாட்டன் வ. உ. சிக்கு ஏதாச்சும் இடம் வச்சி இருக்கியா ? வரலாற்றில் ஒரு பதிவு வச்சிருக்கியா ? எங்க பாட்டான் வ. உ. சியை விட  பெரிய இவரா வல்லபாய் பட்டேல்…  பதில் வச்சிருக்கியா ? நீங்க… சொல்லுங்க..  சுபாஷ் சந்திர போஸை தெரு தெருவா கொண்டு வந்தது எங்க தாத்தா தெய்வத்திருமகன் முத்துராமலிங்க தேவர்.

வட இந்தியாவிலும்,  மேற்கு வங்கத்திலும் ஒரு எழுத்து… ஒரு  பெயர் வெச்சிருக்கியா நீ? அவர் நினைவு தினத்துக்கு ஒரு படம் வெச்சி,  பூ போடுவீகளா ? இந்த  நாட்டின் விடுதலைக்கு ஒன்பது வருஷம் சிறையில் இருந்தார். அவருக்கு என்ன மரியாதை குடுத்து இருக்கு ? நீங்கதான் எங்க வரலாற்றை சிதைத்து… அழித்தவன்…  அதுக்கு அப்புறம் திராவிடன்…

நீங்க என்னவோ வச்சிக்கோங்க…  பாரதம்ன்னு வச்சுக்கோங்க….  நான்  கூட சொல்லிட்ட.. பாரத். சுரத்து,  சாரத்து எத வேணாலும்  வச்சுக்க….  அதனால எனக்கு என்னன்னு சொல்லு ? நம்ம தமிழ் தாய் வாழ்த்தில்   பாரத கண்டம்ன்னு வருது இத வச்சுட்டு அவங்க பேசுவாங்க. அதெல்லாம் நமக்கு ஒன்னும் இல்ல. என்ன வேணா பெயர் வச்சுக்கலாம் என தெரிவித்தார்.