திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முருகன் என்பவர் தனது கடைக்கு அருகே 3 ஆடுகளை மேய விட்டுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை 3 ஆடுகளையும் முட்டி தள்ளியது. இதில் படுகாயமடைந்த 3 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆடுகளின் உடலை பார்வையிட்டனர். மேலும் நேற்று பகல் நேரத்தில் நாயுடுபுரம் சாலை டெப்போ பகுதியில் காட்டெருமை சர்வ சாதாரணமாக உலா வந்ததால் வாகனம் ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.