சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமா சீரியலில் நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவர் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், காதல் கணவர் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அதன் பிறகு அர்னவ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமினில் வெளியே இருக்கிறார். இந்நிலையில் நடிகை திவ்யா பேட்டியில் தனக்கு குழந்தை பிறப்பது குறித்து தற்போது உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இன்னும் சில தினங்களில் எனக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஆனால் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். குடும்பத்தில் வருமானம் இல்லாததால் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

ஏற்கனவே எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. எனவே தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும். அவனை சமுதாயத்தில் ஒழுக்கம் உள்ள மனிதனாக பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து வளர்ப்பேன். அர்னவ் என்னை விட்டு சென்ற போது குழந்தை வேண்டாம் என்று பலரும் கூறினார்கள். ஆனால் கடவுள் கொடுத்த உயிரை கொல்வதற்கு நமக்கு உரிமை இல்லை. அதனால்தான் இந்த குழந்தையை தற்போது பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்று கண் கலங்கியபடி கூறியுள்ளார். மேலும் நடிகை திவ்யாவின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.