தமிழ் சினிமாவில் கலியுகம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பொன்னம்பலம். கடந்த 3 வருடங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பொன்னம்பலத்திற்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தனுஷ், கமல்ஹாசன், சரத்குமார், விஜய் சேதுபதி, கே.எஸ் ரவிக்குமார், ராகவா லாரன்ஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் உதவி செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் அண்மையில் கொடுத்த ஒரு பேட்டியில் சிரஞ்சீவி தனக்கு உதவி செய்தது குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது சிரஞ்சீவியிடம் ஃபோன் பண்ணி ஏதாவது பண உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அதற்கு சிரஞ்சீவி ஹைதராபாத் வாருங்கள் என்று கூறினார். நான் அவரிடம் என் குடும்பத்தினர் எனக்கு உதவியாக இருப்பதால் தற்போது வருவது கடினம் என்றேன். உடனே சிரஞ்சீவி அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லுங்கள்.

அவர்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்றார். நான் அங்கு சென்றபோது என்ட்ரி பீஸ் கூட எனக்கு வாங்கவில்லை. ரூ. 45 லட்சம் செலவு செய்து சிரஞ்சீவி என்னை காப்பாற்றினார். அவருடைய மனைவியும் நன்றாக கவனித்துக் கொண்டார். நான் வணங்கும் கடவுளின் பெயரை வைத்துள்ள சிரஞ்சீவியின் உதவியை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். அவர் உண்மையில் ரியல் மெகா சூப்பர் ஸ்டார் என்று உருக்கமாக பேசியுள்ளார். மேலும் பொன்னம்பலத்தின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.