சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை கலகம் பாடி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குஷ்பூ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய கிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிஷாந்த் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அடுப்பில் வெந்நீர் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

இதனை அறியாத கிஷாந்த் எதிர்பாராதவிதமாக அடுப்பில் இருந்த வெந்நீர் மீது தவறி விழுந்து படுகாயம் அடைந்தான். உடனடியாக கிஷாந்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிஷாந்த் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.