தற்போதைய உலகக் கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் ஆஸம்  அனைத்து பார்மட் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே தேர்வு குழு தலைவர்  இன்சமாம் உல்கஹ்,  பவுலிங் பயிற்சியாளர் மோர்னி மோர்கல் தங்களது பொறுப்பே ராஜினாமா செய்த நிலையில், பாபரசமும் கேப்டன் பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.

உலக கோப்பை வெல்லும் அணியாக கருதப்பட்ட பாகிஸ்தான அணி வேர்ல்ட் கப்பில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தோல்வியை சந்தித்தது. அந்த அணி விளையாடிய 9 போட்டிகளில்4 வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்தது 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.