சென்னையில் பல்வேறு துறையில் சிறப்பிடம் பிடித்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 சக்தி மசாலா நிறுவனம் சார்பில் சென்னை சேத்துப்பட்டில் விருந்து வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இல்லத்தில் இருந்தவாறே பல்வேறு தொழில்துறையில் சாதனை படைத்த பெண்கள் பலர் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். சென்னையை சேர்ந்த மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன்  சமூக நலன் பிரிவிலும், நடிகை ரேவதி பொழுதுபோக்கு பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

உணவு மற்றும் பானங்கள்  பிரிவில் சாந்தா உட்பட பல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் திமுக எம்பி தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாக கிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.