அவதூறு வீடியோ வெளியிட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, நடிகா் சரத்குமாா் சென்னை பெருநகர காவல்துறையின் இணைய குற்றப்பிரிவில் புகாரளித்தாா். இதுகுறித்து நடிகா் சரத்குமாா் ஆன்லைன் வாயிலாக கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனுவில் “சில நாட்களாக 2 யூடியூப் சேனல்களில் என்னை பற்றியும், என் குடும்பத்தினரை பற்றியும், கலைத் துறையினரை பற்றியும் தவறாக சித்தரித்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

என்  புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இத்தகைய இழிவான செயலில் ஈடுபடும் நபரை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திரைத்துறையினரை முகத் திரைக்கு பின்னின்று தவறாக சித்தரிக்கும் இது போன்ற யூடியூப் சேனல்களை முடக்கவேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.