டென்னிஸ் அரங்கை திறப்பதற்கு எம்.பி திருச்சி சிவாவை அழைக்க வேண்டும் என கூறி அவருடைய ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என் நேருவின் காரை வழிமறித்தனர். அமைச்சருக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பியதால் திருச்சி சிவாவின் வீட்டின் மீது அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்ததால் திருச்சி சிவா ஆதரவாளர்கள் 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.