PF சந்தாதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தகுதியான ஊழியர்கள் அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மீண்டும் நீட்டித்திருக்கிறது. இபிஎஃப்ஓ அமைப்பு 3-வது முறையாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக அறிவித்தது.

அதோடு ஊழியர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு மேலும் 15 நாட்களுக்கு, அதாவது ஜூலை 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக வருங்கால வைப்பு நிதி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு EPF திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியத் திட்டத்திற்காக, பிஎஃப் சந்தாதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்க தங்கள் கள அலுவலகங்களை அனுமதித்து உள்ளது