சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரில் இடையே இயங்கும் சதாப்தி விரைவு ரயில் ஜூலை 9-ம் தேதி முதல் கூடுதலாக ஜோலார்பேட்டையில் ஒரு நிமிடம் என்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரில் இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இந்த கூடுதல் சேவை வருகின்ற ஜூலை 9ஆம் தேதி ஜோலார்பேட்டை சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் முருகன் தொடங்கி வைக்கிறார். அதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து வழக்கமாக மாலை 5.30 மணிக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் ஜூலை 9ஆம் தேதி முதல் மாலை 5.25 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.