விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே 3 பேர் இறந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி என்பவர் உயிரிழந்தார்.

இதனிடையில் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விழுப்புரம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்தார்.