கடகம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும்.

எதிர்ப்புகள் விலகி செல்லும். எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது கவலை மனதில் இருந்துக்கொண்டே இருக்கும். மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக சென்று வரவேண்டும். ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்ல வேண்டும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பெற்றோர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். அமைதியை நிலைநாட்டுவீர்கள். எந்தவொரு முடிவு எடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்க வேண்டும். சுயகௌரவம் பாதுகாக்கப்படும். சமூக அக்கறை ஏற்படும். புதிதாக சொத்துக்கள் வாங்ககூடிய யோகம் இருக்கும். ஆன்மீகத்தில் அதிகளவு நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே சுமூகமான நிலை இருக்கும். இன்று இன்பம் பெருகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.