மார்ச் 19 கிரிகோரியன் ஆண்டின் 78 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 79 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 287 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1279 – யாமென் சமரில் மங்கோலியரின் வெற்றியுடன் சீனாவில் சொங் அரசு முடிவுக்கு வந்தது.

1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

1853 – தைப்பிங் மறுமலர்ச்சி இயக்கம் சீனாவைக் கைப்பற்றி நாஞ்சிங்கை அதன் தலைநகராக 1864 வரை வைத்திருந்தது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது கன்னிப் பயணத்திலேயே மூழ்கியது. இதன் எச்சங்கள் 1963 ஆம் ஆண்டில் இதே நாளில் கண்டுபிடிக்கப்பட்டன.

1895 – லூமியேர் சகோதரர்கள் தாம் புதிதாக உருவாக்கிய திரைப்படக் கருவியின் மூலம் முதற்தடவையாக திரைப்படத் துண்டைப் பதிவு செய்தனர்.

1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.

1918 – அமெரிக்க காங்கிரஸ் நேர வலயங்களை நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.

1920 – அமெரிக்க மேலவை இரண்டாவது தடவையாக வெர்சாய் ஒப்பந்தத்ததி நிராகரித்தது (முதல் தடவை 1919 நவம்பர் 19 இல் நிராகரித்திருந்தது).

1931 – அமெரிக்காவின் நெவாடாவில் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்படட்து.

1932 – சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படைகள் அங்கேரியைக் கைப்பற்றின.

1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானில் பிராங்கிளின் என்ற அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 724 பேர் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் அனைத்துத் தொழிற்சாலைகள், இராணுவத் தளங்கள், தொடர்பு வசதிகள் அழிக்கப்பட வேண்டும் என இட்லர் ஆணையிட்டார்.

1946 – பிரெஞ்சு கயானா, குவாதலூப்பு, மர்தினிக்கு, ரீயூனியன் ஆகியன பிரான்சின் வெளிநாட்டு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.

1958 – நியூயார்க்கில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியதில் 24 பேர் உயிரிழந்தனர்.

1962 – அல்சீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1964 – பிரேசிலில் அரசுக்கு எதிராகவும் கம்யூனிசத்திற்கு எதிராகவும் 500,000 மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1965 – 1863 இல் இதே நாளில் கடலில் மூழ்கிய $50,000,000 பெறுமதியான ஜார்ஜியானா கப்பலின் எச்சங்கள் 102 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டன.

1972 – இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1982 – போக்லாந்து போர்: அர்கெந்தீனப் ப் படையினர் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.

1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.

2002 – ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.

2002 – சிம்பாப்வே மனித உரிமை மீறல்கள், தேர்தல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பொதுநலவாயத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டது.

2004 – பால்ட்டிக் கடலில் 1952 இல் உருசிய மிக்-15 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சுவீடனின் டிசி-3 விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2004 – சீன குடியரசின் அரசுத்தலைவர் சென் சூயி-பியான் சுடப்பட்டார்.

2008 – ஜிஆர்பி 080319பி என்ற அண்ட வெடிப்பு அவதானிக்கப்பட்டது.

2011 – லிபிய உள்நாட்டுப் போர்: கடாபியின் படைகள் பங்காசி நகரைக் கைப்பற்றத் தவறியதை அடுத்து, பிரெஞ்சு வான் படை லிபியா மீது தாக்குதலை ஆரம்பித்தது.

2013 – ஈராக்க்கில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 98 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் காயமடைந்தனர்.

2016 – பிளைதுபாய் 981 விமானம் உருசியாவில் ரஸ்தோவ் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கும் போது மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 62 பேரும் உயிரிழந்தனர்.

2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.

இன்றைய தின பிறப்புகள்

1077 – அப்துல் காதிர் அல்-ஜிலானி, ஈராக்கிய சூபி அறிஞர் (இ. 1165)

1206 – குயுக் கான், மங்கோலியப் பேரரசர், 3வது கான் (இ. 1248)

1844 – மினா கேந்த், பின்லாந்து ஊடகவியலாளர் (இ. 1897)

1883 – நார்மன் ஏவொர்த், பிரித்தானிய வேதியியலாளர் (இ. 1950)

1903 – வி. ஏ. அழகக்கோன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1973)

1906 – அடோல்வ் ஏச்மென், செருமானிய சுத்ஸ்டாப்பெல் அதிகாரி (இ. 1962)

1919 – டி. கே. பட்டம்மாள், தமிழக கருநாடக இசைப் பாடகி (இ. 2009)

1922 – ஹிரூ ஒனோடா, சப்பானிய இராணுவ அதிகாரி (இ. 2014)

1928 – விக்கிரமன், தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 2015)

1928 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர், கல்வியாளர் (இ. 2011)

1933 – குமரி அனந்தன், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர்

1933 – எம். பி. என். பொன்னுசாமி, தமிழக நாதசுவரக் கலைஞர்

1943 – மார்யோ மோன்டி, இத்தாலியப் பிரதமர்

1952 – மோகன் பாபு, தெலுங்கு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி

1978 – ரங்கன ஹேரத், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

1984 – தனுஸ்ரீ தத்தா, இந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள்

1406 – இப்னு கல்தூன், துனீசிய வரலாற்றாளர் (பி. 1332)

1890 – குருதத்த வித்யார்த்தி, இந்திய சமூக சேவகர், கல்வியாளர், ஆரியசமாசத்தின் தலைவர் (பி. 1864)

1927 – அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளை, தமிழகத் தவில் கலைஞர் (பி. 1876)

1950 – எட்கர் ரைசு பர்ரோசு, அமெரிக்கப் போர் வீரர், எழுத்தாளர் (பி. 1875]])

1978 – மடபூஷிய அனந்தசயனம், இந்திய அரசியல்வாதி (பி. 1891)

1979 – அ. நாகலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1901)

1982 – ஆச்சார்ய கிருபளானி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1888)

1987 – லூயி டே பிராலி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1892)

1988 – எஸ். இராமநாதன், தமிழக கருநாடக வாய்ப்பாட்டு, வீணைக் கலைஞர் (பி. 1917)

1998 – சித்தி ஜுனைதா பேகம், தமிழக முஸ்லிம் பெண் எழுத்தாளர் (பி. 1917)

1998 – ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு, கேரளத்தின் 1வது முதலமைச்சர் (பி. 1909)

2008 – ஆர்தர் சி. கிளார்க், பிரித்தானிய-இலங்கை அறிபுனை எழுத்தாளர் (பி. 1917)

2008 – ரகுவரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1948)

இன்றைய தின சிறப்பு நாள்

புனித யோசேப்பு நாள் (கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம்)